முகப்பு
கோயம்புத்தூர்

ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை சாவு

பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.  

Updated On : 25 டிசம்பர் 2018, 8:30 am IST
பகிர்:

பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.  
பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தைச் சேர்ந்தவர் மாசியப்பன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகன் ஜெய்கிருஷ்ணா (ஒன்றரை வயது). 
இந்நிலையில், நந்தினி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெய்கிருஷ்ணா, அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்பதற்குள் அது உயிரிழந்தது. இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments