முகப்பு
கோயம்புத்தூர்

சாலை மறியல்: 80 ஆசிரியர்கள் கைது

வால்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 80 ஆசிரியர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 2:30 am IST
பகிர்:

வால்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 80 ஆசிரியர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 22ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை வட்டாரத்தில் மொத்தம் உள்ள 89 பள்ளிகளைச் சேர்ந்த 140 ஆசிரியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 
இந்நிலையில் ஸ்டேன்மோர் சந்திப்பில் 80 ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.