சாலை மறியல்: 80 ஆசிரியர்கள் கைது
வால்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 80 ஆசிரியர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வால்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 80 ஆசிரியர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 22ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை வட்டாரத்தில் மொத்தம் உள்ள 89 பள்ளிகளைச் சேர்ந்த 140 ஆசிரியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டேன்மோர் சந்திப்பில் 80 ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.