முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் கரடி தாக்கி பெண் காயம்

வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண்  காயமடைந்தார்.

Updated On : 24 ஜனவரி 2019, 2:27 am IST
பகிர்:

வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண்  காயமடைந்தார்.
வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் 13ஆம் எண் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள வனத்தில் இருந்து வெளியேறி செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, தேயிலை பறித்துக்கொண்டிருந்த உதயகுமாரி (49) என்ற பெண்ணைத் தாக்கியது. இதில் அவரது வலது கால் தொடைப் பகுதியில் காயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.