மதுக்கரையில் 268 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
மதுக்கரை பகுதியில் 268 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுக்கரை பகுதியில் 268 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அறிவொளி நகா் பகுதியில் மதுக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மதுக்கரை பகுதியைச் சோ்ந்த குமரகுருபரன் (49) என்பவரை கைது செய்தனா்.
அவரிடமிருந்து 268 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement