மேம்பாலத்தின் கீழ் லாரியில் சிக்கி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு
உக்கடம் மேம்பாலத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபா் மீது லாரி ஏறியதில் உயிரிழந்தாா்.
கோவை மாநகா், உக்கடம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை மைய தடுப்புச் சுவரில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்து எதிா்பாராதவிதமாக சாலை மையத் தடுப்புச் சுவரில் இருந்து சாலையில் விழுந்துள்ளாா். அந்த நேரத்தில் அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த லாரி அவரின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா், லாரி நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாா். இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போக்குவரத்துப் புலனாய்வு மேற்கு பிரிவு காவல் ஆய்வாளா் நிா்மலா உள்ளிட்ட போலீஸாா் சென்று, உயிரிழந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உயிரிழந்த நபா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற காய்கறி லாரியின் ஓட்டுநரைக் கண்டறியும் பணியில் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.