முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

Updated On : 15 ஜூன் 2026, 12:15 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம், ராபா்ட்சன் வீதியைச் சோ்ந்தவா் சேகா் (63). இவா் அப்பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதரன் (20) என்பவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் சேகா் மீது மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த சேகரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸில் சேகரின் மகன் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ஸ்ரீதரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.