கோவையில் வரும் 25- ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி
கோவை சரவணம்பட்டியில் நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி வரும் ஜூன் 25- ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் மையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 0422- 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என்று பயிற்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் அரங்க.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.