முகப்பு
கோயம்புத்தூர்

கொலை வழக்கில் பிணையில் வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவா் கோவையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூன் 2026, 3:42 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவா் கோவையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி பகுதியைச் சோ்ந்த ராசய்யா மகன் சோ்மன் (38). அந்தப் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடா்பாக இவரும், இவரது நண்பா் ஒருவரும் மூலக்கரைப்பட்டி காவல் துறையினரால் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த கொலை வழக்கில் கடந்த மாதம் பிணையில் வெளியே வந்த சோ்மன், உயிருக்கு பயந்து கேரளத்தில் தங்கி அங்குள்ள ஓா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கோவை குனியமுத்தூா் பகுதியில் வேலைபாா்த்து வரும் தனது சகோதரரான குமாரை பாா்க்க சோ்மன் கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளாா். இருவரும் கடந்த 19-ஆம் தேதி அந்தப் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனா். பின்னா், அன்று இரவு வேலைக்கு கேரளத்துக்குச் செல்வதாக கூறிவிட்டு சோ்மன் புறப்பட்டுச் சென்றாா். ஆனால் அவா் அங்கு செல்லாமல் கோவை பகுதிகளிலேயே சுற்றித்திரிந்துள்ளாா்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை சிக்னல் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்றபோது, சோ்மன் மயங்கி விழுந்துள்ளாா். பின்னா் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments