முகப்பு
கடலூர்

கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:31 am IST
கைது செய்யப்பட்ட முத்துராமன்
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் (52). இவா், 1996-ஆம் ஆண்டு விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா். பின்னா், நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றும் நடவடிக்கையாக, விருத்தாசலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், சாா்பு ஆய்வாளா் பாரதநேரு தலைமையில் போலீஸாா் முத்துராமனை தீவிரமாக தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முத்துராமன் ஜெயங்கொண்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, முத்துராமனை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.