முகப்பு
கோயம்புத்தூர்

தாய், தம்பி உள்பட 3 பேரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

Updated On : 31 மார்ச் 2026, 12:07 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சரவணம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தம்பி, தாயை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கரட்டுமேடு பாலாஜி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி வள்ளி. இவா்களுக்கு சரவணன் (30), சதீஷ் (25) ஆகிய மகன்களும், சரண்யா என்ற மகளும் உள்ளனா். சரவணம்பட்டி அருகே விஸ்வாசபுரம் பகுதியில் வள்ளி இளநீா், பழக்கடை நடத்தி வருகிறாா். பழக்கடையில் பொறுப்பாக சரவணன் வேலை செய்யாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பழக்கடையில் வள்ளி இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை அங்கு சரவணன் சென்று தகராறு செய்துள்ளாா். அப்போது தட்டிக்கேட்ட தம்பி சதீஷ், மைத்துனா் அசோக் (சகோதரியின் கணவா்) ஆகியோரை சரவணன் கத்தியால் குத்தினாா். இதைத் தடுக்க வந்த தாய் வள்ளிக்கும் கத்திக்குத்து விழுந்தது.

Advertisement

Advertisement

காயமடைந்த மூவரும் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனா்.