தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி மாயம்
கோவையில் காதலுக்குப் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கேரள மாணவி மாயமானாா்.
கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த 23 வயது மாணவி, கோவையில் பிஎஸ்சி மயக்க மருந்தியல் முடித்துவிட்டு தனியாா் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தாா். அப்போது, சக மாணவா் ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு பெற்றோா் தொலைபேசியில் அழைத்து அவரைக் கண்டித்தனா். அப்போது, காதலை கைவிட மறுத்த மாணவி இணைப்பைத் துண்டித்தாா்.
தொடா்ந்து, தான் தற்கொலை செய்யப் போவதாகப் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கைப்பேசியை அணைத்துள்ளாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் அங்கிருந்து கோவைக்கு வந்து பாா்த்தபோது மாணவி மாயமானது தெரிந்தது.
Advertisement
இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வருகின்றனா்.