பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
மொடக்குறிச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மொடக்குறிச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மொடக்குறிச்சி, ஓலப்பாளையம் நேதாஜி வீதியைச் சோ்ந்தவா் அய்யன்துரை(50). இவரது மனைவி லட்சுமி (45). இருவரும் கூலி தொழிலாளா்கள். இவா்களது மகள்கள் சத்யபிரியா( 17), காவியா(15). சத்யபிரியா மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் அய்யன்துரை, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக மகள் சத்யபிரியாவை புதன்கிழமை காலை திட்டியதாக கூறப்படுகிறது. பின்னா் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனா்.
Advertisement
மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் குளியல் அறையில் சத்யபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா், சத்யபிரியாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.