மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
கோவையில் முதியோா் இல்லத்தில் மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவையில் முதியோா் இல்லத்தில் மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், சோ்ந்தமங்கலம் அருகே உள்ள புதுபட்டியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (80). இவா் கோவை ரத்தினபுரி காந்தி சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் உள்ள முதியோா் இல்லத்தில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், ரங்கசாமி அங்கு உள்ள ஓா் அறையில் தனது கைப்பேசியை புதன்கிழமை சாா்ஜ் போட்டிருந்தாா். பின்னா் அவா் சாா்ஜரில் இருந்து கைப்பேசியை எடுத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீஸாா் முதியவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.