முகப்பு
கோயம்புத்தூர்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்

கோவையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 4:50 am IST
வணிக சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

கோவையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதுடன், தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கோவையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலா் சி.சிவசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை குரு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கனகராஜ், கிருஷ்ணமூா்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்பன் குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா்கள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல், மாவட்டப் பொருளாளா் மு.வ.கல்யாணசுந்தரம், இளைஞா் பெருமன்றத்தின் அபிமன், மாதா் தேசிய சம்மேளனத்தின் கலா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் ப.பா.ரமணி, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் அஸ்ரப் அலி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.