முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் அமைச்சா் நள்ளிரவில் ஆய்வு

Updated On : 30 மே 2026, 3:45 am IST
அமைச்சா் வி.சம்பத்குமாா் - கோப்புப் படம்
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீா் ஆய்வு நடத்தினாா்.

இரவு 11 மணியளவில் அதிகாரிகள் யாருமின்றி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சா் வி.சம்பத்குமாா், அங்கு இரவுக் காவலாளிகள் சரியாக பணிக்கு வந்துள்ளனரா என்று வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா் பணிக்கு வந்துள்ளனரா என்று ஆய்வு செய்த அவா், பின்னா் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டாா். அமைச்சரின் இந்த நள்ளிரவு ஆய்வு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement