முகப்பு
கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து மீது மோதி பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி

Updated On : 31 மே 2026, 1:54 am IST
கோவை அண்ணா சிலை அருகே பள்ளிச் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.
பகிர்:

கோவையில் அரசுப் பேருந்து மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்றது.

கிருஷ்ணகிரியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சனிக்கிழமை அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. கோவை, அண்ணா சிலை சிக்னல் அருகே வந்தபோது, எதிரே காந்திபுரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதி தாறுமாறாக ஓடிய லாரி அப்பகுதியில் இருந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு நின்றது.

பேருந்தில் இருந்த பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். லாரி ஓட்டுநருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.