முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் நுழைவுவாயில் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 23 மே 2026, 12:01 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் நுழைவுவாயில் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து ஒன்று துவாக்குடி சாலையில் வெளியே வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த த. சதீஷ் (37) ஓட்டி வந்துள்ளாா்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இழுப்பூரைச் சோ்ந்த சி. மருதமுத்து (34), பொ. பழனிசாமி (32) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பேருந்து முனையத்தின் உள்ளே சென்றுகொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மருதமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். உடன் வந்த பழனிசாமிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.