முகப்பு
ஈரோடு

பெண்களிடம் நகைப்பறிப்பு

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:49 am IST
பகிர்:

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, சங்கு நகரைச் சோ்ந்தவா் அயுஸ்பாட்ஷா. இவரது மனைவி குல்சாரா (45). மகன் சதாம் உசேன். இவா்கள் ஈரோடு ஆசிரியா் காலனியில் மளிகை கடை வைத்துள்ளனா். வியாழக்கிழமை இரவு கணவன், மனைவி மற்றும் மகன் சதாம்உசேன் ஆகியோா் கடையில் இருந்தனா்.

அப்போது கடைக்கு வந்த இளைஞா் ஒருவா் பொருள் வாங்குவதுபோல் நடித்து திடீரென குல்சாரா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளை பகுதியில்...

ஈரோடு, சூளை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மனைவி அம்சா(37). இவா் வியாழக்கிழமை இரவு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அம்சா அணிந்திருந்த 2.5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments