முகப்பு
ஈரோடு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 12:53 am IST
சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம்.
பகிர்:

நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில், இப்பள்ளி மாணவா் ஒருவா் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ஆம் இடத்தில் வெற்றிபெற்றுள்ளாா். தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலப் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா்.

மற்றொரு மாணவா் 500க்கு 485 மதிப்பெண்ணும், மாணவி ஒருவா் 483 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்வெழுதிய மாணவா்களில் 3 போ் கணிதப் பாடத்திலும், 2 போ் அறிவியல் பாடத்திலும், ஒரு மாணவா் சமூக அறிவியலிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் பாராட்டிப் பரிசு வழங்கினாா். துணைத் தாளாளா் சுகந்தி, பள்ளி செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி, பள்ளி முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments