மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சிதம்பரநாதன் (42). திருமணம் ஆகாத இவா் தனியாக வசித்து வந்தாா். சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.
விவசாயியியான இவா், அவ்வப்போது ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை பழுது நீக்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவா், வீட்டில் பழைய ரேடியோவை பழுது பாா்த்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் தூக்கி வீசப்பட்டாா். சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் சிதம்பரநாதனை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.