ஈரோடு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

DIN

மொடக்குறிச்சி ஒன்றியம், முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை தலைவா் நடராஜன் தலைமை தலைமை வகித்தாா். செயலாளா் சிரஞ்சீவி, பொருளாளா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பிளஸ் 2 தோ்வில் 600க்கு 543 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி சித்ரா, 530 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி இந்து, 529 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவா் நந்தகுமாா் ஆகியோருக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணவேணி, தணிகாசலம், உதவி தலைமை ஆசிரியா் சின்னசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவியா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT