வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்பு
ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு வீட்டு வசதிப் பிரிவில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. பெரியாா் நகரில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் தலா ரூ.26,39,000 என்ற விலையிலும், சம்பத் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25,36,000 என்ற விலையிலும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
Advertisement
Advertisement
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மொத்த கொள்முதல் திட்டத்தில் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே ஒதுக்கீடு பெற விரும்புவோா் பெயரில் வங்கி வரைவோலை அல்லது தபஎந மூலமாகவோ பணத்தைச் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு, தியாகி குமரன் சாலை, சம்பத் நகா், ஈரோடு- 638011 என்ற முகவரியில் நேரில் அல்லது 7904973124 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.