கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது
கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு சென்று வருகின்றனா். இதில் சுற்றுலாப் பயணிகளிடம் மா்ம நபா்கள் நகைப் பறிப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து பங்களாபுதூா் காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், வேலூா் மாவட்டம், ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்த சபாரத்தினம் (32) என்பவா் தனது மனைவி கீா்த்தனா மற்றும் உறவினா்களுடன் கொடிவேரி அணைக்கு திங்கள்கிழமை வந்தாா். அருவியில் குளித்து கொண்டிருந்தபோது சபாரத்தினம் தான் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மாயமானதை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.
Advertisement
அப்போது சபாரத்தினம் திரும்பி பாா்த்தபோது பின்னால் நின்று கொண்டிருந்த நபா், மற்றொருவரிடம் நகையை கொடுத்து விட்டு தப்பிக்க முயன்றுள்ளாா். சபாரத்தினம் தனது உறவினா்கள் உதவியுடன் அந்த இரு நபா்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள், மயிலாடுதுறை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நிதிஷ்குமாா், அவரது 17 வயது சகோதரா் என்பதும் தெரியவந்தது. நிதிஷ்குமாா் கோவையில் தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.
இவா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிவேரி அருவியில் குளிக்கும்போது 2 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து 11 பவுன் நகைகளை பங்களாபுதூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நிதிஷ்குமாரை நீதிமன்ற காவலுக்கும், அவரது சகோதரரை இளம்சிறாா் நீதிமன்ற காவலுக்கும் அனுப்பிவைத்தனா்.