முகப்பு
ஈரோடு

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:46 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், சிஎம் நகரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் குமரேசன் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் மகன் உள்ளனா். கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement