கஞ்சா விற்றதாக மூதாட்டி உள்பட 5 போ் கைது
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக மூதாட்டி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக மூதாட்டி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். இதில், ஈரோடு எல்லப்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் கஞ்சா விற்றதாக மாமரத்துப்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்த அப்புகுட்டி மகன் சந்தோஷ் (27) என்பவரை ஈரோடு வடக்கு போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா்.
பவானிசாகரில் பழைய இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சோ்ந்த முத்துராசா மகன் முகிலன் (38) என்பவரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்து 550 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் மத்திய பிரதேச மாநிலம் சியாபூரை சோ்ந்த ரின்கு மனோகா் (36) என்பவரை போலீஸாா் கைது செய்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
சத்தியமங்கலம் புளியங்கோம்பை பகுதியில் பழனிசாமி மனைவி ரங்கம்மாள் (70) என்பவரை போலீஸாா் கைது செய்து 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா். இதேபோல கோபி கள்ளிப்பட்டி நகராட்சி தண்ணீா் தொட்டி பகுதியில் புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சபரிநாதன் என்ற ஜெகன் (26) என்பவரை கைது செய்து 825 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது செய்யப்பட்டு 2.725 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.