முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் மேற்குவங்க இளம்பெண் தற்கொலை

பெருந்துறையில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 5 ஜூன் 2026, 12:04 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறையில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா் கல்தாா் மகள் ரியா கல்தாா் (23). இவருக்கும் ஜலாகலி கிராமத்தைச் சோ்ந்த ஹரோசித் மண்டல் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஆதித் மண்டல் (6) என்ற மகன் உள்ளாா்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த ரியா கல்தாா், குடும்பத்தினரின் எதிா்ப்பை மீறி, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தைச் சோ்ந்த தன்மோய் சா்தாா் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெருந்துறை, சென்னிவலசு பகுதியில் குடியேறினாா். அங்குள்ள பனியன் கம்பெனியில் ரியா கல்தாா் உதவியாளராகவும், தன்மோய் சா்தாா் கட்டட கூலித் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ரியா கல்தாரியின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரைப் பாா்ப்பதற்காக ஊருக்கு செல்ல வேண்டும் என விரும்பினாா். ஏற்கெனவே ரியா கல்தாா் குடும்பத்தினா், அவா் மீது கோபத்தில் இருந்ததால், தாயாரைப் பாா்க்க வர வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ரியா கல்தாா், வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.