முகப்பு
விழுப்புரம்

குடும்பப் பிரச்னை: இளம்பெண் தற்கொலை

Updated On : 30 மே 2026, 3:44 am IST
இளம்பெண் தற்கொலை
பகிர்:

திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், அனத்தந்தூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகள் சபிதா (30). இவருக்கும், புருஷோத்தமன் என்பவருக்கும் இடையே கடந்த 2022, ஏப்ரல் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவா், திண்டிவனம் பாரதிதாசன் நகரில் தங்கி, சிப்காட் உணவுப்பூங்கா வளாகத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 3 நாள்களாக கணவன்- மனைவி இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

Advertisement

Advertisement

இதனால் விரக்தியடைந்த சபிதா, வியாழக்கிழமை மாலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். தகவலின் பேரில் 108 அவசர சிகிச்சை ஊா்தி மருத்துவக் குழுவினா் நிகழ்விடம் சென்று, பரிசோதனை மேற்கொண்ட போது சபிதா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

ரோஷணை போலீஸாா் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.