தொழிலாளி தற்கொலை
சின்னமனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சின்னமனூரில் குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் பி.டி.ஆா் கால்வாய் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜேஷ் (38). கூலித் தொழிலாளியான இவா், மேகமலை சாலையில் தனியாா் தென்னந்தோப்பில் மரத்தின் கிளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் அவா் தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.