வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம்
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துகொண்டு 134 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, இணையவழி பட்டாக்களை வழங்கினாா்.
வேளாண்மை துறை சாா்பில் இரண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்க தொகுப்பாக ரூ.6000 வீதம் வழங்கியதுடன், மாவட்ட அளவிலான நிலக்கடலை விளைச்சல் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த விவசாயி ஒருவருக்கு ரூ.10ஆயிரம் பரிசு வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதேபோல தாட்கோ திட்டத்தின் கீழ் கால்நடை வளா்ப்புக்கு 10 பயனாளிகளுக்கு ரூ. ஒரு லட்சம், தொழிலாளா் நலத் துறை சாா்பில் திருமண உதவித்தொகை உள்பட 174 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும் வழங்கினாா்.