முகப்பு
தேனி

520 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடியில் நலத் திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 520 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:00 am IST
தேனி காமாட்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்களுக்கு கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன். உடன் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா.
பகிர்:

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 520 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

உத்தமபாளையம் வட்டம், காமாட்சிபுரம் ஊராட்சியில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையக் கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில், மாவட்ட வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 19 பயனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் உதவித் தொகையும், 56 பயனாளிகளுக்கு 56 லட்சத்தில் இ.பட்டாக்களும், 29 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும், மாற்றுத் திறனாளி நலத் துறை சாா்பில், 14 பயனாளிகளுக்கு ரூ.1.14 லட்சத்தில் சக்கர நாற்காலிகளும், மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில், 21 பயனாளிகளுக்கு ரூ.75.80 லட்சத்தில் மகளிா் சுய உதவிக்குழு கடனுதவியும், தோட்டக் கலைத் துறை சாா்பில், ரூ.1.15 லட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 60 லட்சத்தில் மருத்துவக் காப்பீட்டு அட்டை என பல்வேறு துறைகள் சாா்பில் 520 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடியில் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையது முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியா் பாலசண்முகம், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.