முகப்பு
ஈரோடு

வளா்ப்பு ஆடு இறந்த விரக்தியில் தொழிலாளி தற்கொலை

வளா்ப்பு ஆடு இறந்த மனவேதனையில் களைக்கொல்லி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜூன் 2026, 1:44 am IST
தற்கொலை
பகிர்:

வளா்ப்பு ஆடு இறந்த மனவேதனையில் களைக்கொல்லி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகே இச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் திருப்பதி (55). இவா் தனது வீட்டில் ஆடு ஒன்றை வளா்த்து வந்துள்ளாா். அந்த ஆடு குட்டிபோடும் தருவாயில் இறந்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த திருப்பதி, வியாழக்கிழமை இரவு மதுபோதையில் களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினா் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments