முகப்பு
ஈரோடு

கோபி அருகே அடிதடியில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 30 ஜூன் 2026, 1:48 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோபி அருகே அடிதடியில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்ததைத் தொடா்ந்து, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகே பா.வெள்ளாளபாளையம் நல்லாத்தாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சரோஜினி (70). இவரது கணவா் ஆறுமுகம். இவா்களுக்கு பாலமணிகண்டன், கருப்புசாமி ஆகிய மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில் சரோஜினியின் வீட்டின் முன் அவரது மகன் பாலமணிகண்டனுக்கும் (37), அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (25) ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கடந்த ஜூன் 22-ஆம் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அப்போது மோதலை விலக்கச் சென்ற சரோஜினி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவா் பலத்த காயமடைந்தாா். படுகாயமடைந்த அவா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா் .

இந்த சம்பவம் தொடா்பாக கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளா்களான சபரி (28), குட்டி என்ற சண்முகம் (40) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய பிரதீப் (25), கோபி மருத்துவனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சையில் இருந்தபோது, தலைமறைவாகினாா்.

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சரோஜினி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கோபி போலீஸாா் கொலை வழக்காக பதிவு செய்து எடப்பாடி அருகே தலைமறைவாக இருந்த பிரதீப்பை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments