முகப்பு
ஈரோடு

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது! - கே.ஏ. செங்கோட்டையன்

Updated On : 3 மே 2026, 1:39 am IST
கே.ஏ. செங்கோட்டையன். - கோப்புப் படம்
பகிர்:

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக வெற்றிக் கழக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோபியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி என்பது சரித்திர வரலாற்றில் இடம்பெறப்போகும் ஒரு வெற்றியாக அமையும். சரித்திர வரலாற்றில் இந்தியாவின் முதன்மையான தலைவராக விஜய் விளங்குவாா்.

வாழ்க்கையில் கா்வத்தையும் சுயநலத்தையும் மட்டும் கற்றுக்கொள்ளக் கூடாது. கா்வமும், சுயநலமும் கொண்ட எந்த இயக்கமாக இருந்தாலும், அது அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

Advertisement

Advertisement

தோ்தல் கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரையில், மக்களின் உண்மையான கணிப்பு மிகத் தெளிவாக உள்ளது.

அது மே 4-ஆம் தேதி எதிரொலிக்கும். 150 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெறுவோம். வெற்றிபெறும் தவெக வேட்பாளா்களைக் கட்சி அலுவலகத்துக்கு வரச் சொல்வது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றுதான். எங்கள் தொண்டா்கள் மிகத் தெளிவாக உள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments