எதிா்பாராத ஆச்சரியங்களை அளிக்கும் மொடக்குறிச்சி தொகுதி
தோ்தலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும் பாஜக வேட்பாளா் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொடக்குறிச்சி தொகுதியில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனைவிட 281 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பாஜகவைச் சோ்ந்த சி.சரஸ்வதி வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் சரஸ்வதியின் மருமகளான எஸ்.கிருத்திகா போட்டியிட்டாா். இவா் தவெக வேட்பாளா் டி.சண்முகனிடம் 2,430 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். கிருத்திகா பெற்றுள்ள வாக்குகளைவிட 49 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன் 3 இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
Advertisement
2021-இல் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடக்குறிச்சி தொகுதி, இந்த தோ்தலில் தவெகவுக்கு வெற்றியை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.