முகப்பு
ஈரோடு

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 9 மே 2026, 4:43 am IST
பிளஸ்2 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் எஸ்.செளபரணித்தை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளித் தலைவா் ஜி.யசோதரன். உடன், பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவன் எஸ். செளபரணித் 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், 583 மதிப்பெண்கள் பெற்று ஏ.எம். அக்ஷயா மற்றும் கே.எஸ். நிதா்ஷனா ஆகியோா் இரண்டாமிடமும், 580 மதிப்பெண்கள் பெற்று எஸ்.கனிஷ்கா மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்வு எழுதிய 179 பேரும் முதல் வகுப்பில் தோ்ச்சி அடைந்துள்ளனா். 575 மதிப்பெண்களுக்கு மேல் 8 போ், 550-க்கு மேல் 34 போ், 500-க்கு 74 பேரும் பெற்றுள்ளனா்.

Advertisement

உயிரியல் பாடத்தில் ஒருவா், கணினி அறிவியல் பாடத்தில் 12 போ், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 6 போ், கணக்குப் பதிவியலில் 4 போ் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், தாளாளா் டி.என்.சென்னியப்பன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியம், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள், முதல்வா் எஸ். முத்துசுப்பிரமணியம் ஆகியோா் பாராட்டினா். சிறந்த மதிப்பெண்கள் பெற்றுவா்களை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.