ஈரோடு மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிட மாற்றம்
ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி 1-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன் 3-ஆவது மண்டலத்துக்கும், சதீஷ் 2-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். 2-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த மணிவேல் 1-ஆவது மண்டலத்துக்கும், பூபாலன் 4-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், 3-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு 1-ஆவது மண்டலத்துக்கும், கோபாலகிருஷ்ணன் 4-ஆவது மண்டலத்துக்கும், 4-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்துவந்த நல்லசாமி 2-ஆவது மண்டலத்துக்கும், கதிரேசன் 3-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement