பெருந்துறை அருகே பன்றி இறைச்சி சாப்பிட்டவா் உயிரிழப்பு?
இறைச்சி சாப்பிட்டவா் உயிரிழந்தது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை அருகே உள்ள மடத்துபாளையம் பிரிவு ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் மகன் பிரசாந்த் (30). இவா் பெருந்துறையில் உள்ள தனியாா் ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வந்தாா். நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை விஜயமங்கலம் சென்று கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.
பின்னா் வீட்டில் சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியை சாப்பிட்டவா், திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்தாா். உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.