மாரடைப்பால் இளைஞா் உயிரிழப்பு
வரஞ்சரம் அருகே மாரடைப்பால் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் செ.மாரிமுத்து (32). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை நெஞ்சு வலிப்பதாக, அவரது தாய் ஜோதியிடம் தெரிவித்தாராம்.
உடனே மாரிமுத்துவை கொங்கராபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மாரிமுத்து ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அங்கேயே வைத்து விட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.