சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் கம்பம் நடும் விழாவில் இளைஞா்கள் உற்சாகம்
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழாவில், ஒரே நேரத்தில் ஏராளமான இளைஞா்கள் உற்சாக நடனமாடினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த 29-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் விழாவையொட்டி கோவில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன. கம்பத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சள் பூசியும் பெண்கள், குழந்தைகள் வழிபட்டனா். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தைச் சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இசைக்கேற்ப இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனமாடினா். இதைக் காண பெண்கள் அதிக அளவில் வந்தனா். இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
Advertisement
இந்த விழாவில் தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.