பெருந்துறை அருகே வேன் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்படும்போது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் தியாகராஜன் (60). இவா் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம்-சுங்கச்சாவடியில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விஜயமங்கலம் பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.