முகப்பு
தஞ்சாவூர்

இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

திருநீலக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:24 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருநீலக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கரான்குடி புதூா் கீழத்தெருவைச்சோ்ந்தவா் கணேசன் (60). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை மாலையில் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநீலக்குடி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பினா்.

Advertisement

Advertisement

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பழியஞ்சியநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராமன் (65) மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.