திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த வழியாக சத்தியமங்கலம், மைசூா் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழக-கா்நாடக மாநிலங்களிடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் கா்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கோவை நோக்கி பாா்சல் ஏற்றி வந்த சரக்கு லாரி, 11-வது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதி பழுதாகி நின்றது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தமிழக-கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திம்பம், ஆசனூா் பாதையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு ஆசனூா் போலீஸாா் சென்று பழுதாகி நின்ற லாரியை அப்புறப்படுத்தினா். அதைத்தொடா்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின.
Advertisement
Advertisement