கோபியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை! அமைச்சா் செங்கோட்டையன்
கோபியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபியில் தனியாா் கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோபி தொகுதி வளம் பெறுவதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற செயலாற்றுவேன். கோபி நகரில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்க விரைவில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோபியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக உருவாக்க முதல்வரிடம் பேசி நிதிநிலை ஒதுக்கீட்டுக்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
பவானி ஆற்றின் குறுக்கே நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றாா்.