கோத்தகிரியில் திமுகவினர்ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கோத்தகிரி அரவேணு பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கோத்தகிரி அரவேணு பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் கதர் வாரியத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கோத்தகிரி ஒன்றியச் செயலாளர் எக்ஸ்போ செந்தில், கீழ்கோத்தகிரி ஒன்றியச் செயலாளர் சிவகுமார், பேரூராட்சி கழகச் செயலாளர் போஜன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வீரபத்திரன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் பீமன், ராஜு, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், நிர்வாகிகள் கண்ணம்மாள், ராஜகுமாரி, ஸ்டுடியோ செல்வம், காங்கேயன், சந்திரசேகர், நடேசன், கருணாநிதி, தங்கவேல், மணிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல் கூடலூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.