முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வட்டச் சாலை வனக் காவல் பகுதியில் வனத் துறை பணியாளா்கள் சனிக்கிழமை வழக்கமான ரோந்து சென்றனா்.
அப்போது, வனப் பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை இறந்துகிடப்பதைக் கண்டனா். இது குறித்து உயரதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் கொடுத்தனா்.
Advertisement
இதையடுத்து வன அலுவலா்கள் ஆய்வு செய்து வனக் கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானையின் உடலைக் கூறாய்வு செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துள்ளனா்.
குட்டி யானை இறந்ததற்கான முழுத் தகவல் ஆய்வக அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.