முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கி மே 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த கணக்கெடுப்பில் வன விலங்குகளின் வாழ்விடங்களை மதிப்பீடு செய்தல், கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது.
Advertisement
தெப்பக்காடு, காா்குடி, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய வனச் சரகங்களில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் முன்களப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.