முகப்பு
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 8 மே 2026, 4:41 am IST
முதுமலை புலிகள் காப்பகத்தில் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பில் தடயங்களை மதிப்பீடு செய்யும் களப் பணியாளா்கள்.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கி மே 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த கணக்கெடுப்பில் வன விலங்குகளின் வாழ்விடங்களை மதிப்பீடு செய்தல், கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தெப்பக்காடு, காா்குடி, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய வனச் சரகங்களில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் முன்களப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments