கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:
பொதுத்தோ்தலில் தபால் வாக்குகள் செலுத்தும் வழிமுறைகள், தோ்தலில் கையாள வேண்டிய நடைமுறைகள், வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு மற்றும் பயன்படுத்துதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் விதிமுறைகள்குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும்போதும், முடிந்தபிறகும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அலுவலா்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, கூடலூா் பேருந்து நிலையத்தில் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியா் விளக்கமளித்தாா். அதைத்தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புண்ா்வு ஏற்படுத்தினாா்.
தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் பழனிச்சாமி, தோ்தல் தனி வட்டாட்சியா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்துகொணடனா்.