உதகையில் கொட்டித் தீா்த்த கனமழை
உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடும் குளிா் நிலவியது.
உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடும் குளிா் நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மந்தமான காலநிலை நிலவியது. மாலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
குறிப்பாக சேரிங்கிராஸ், மாா்க்கெட், பந்தைய சாலை, பட்பயா் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.
Advertisement