முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 7 மே 2026, 4:52 am IST
முத்தங்கா சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனைச் சாவடியில் கலால் துறை அலுவலா்கள் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

Advertisement

அப்போது அந்த காரில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த அா்ஷத் (44), இஸ்மாயில் (40) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.