உதகையில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்
வணிக சிலிண்டா் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் சாா்பில் உதகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வணிக சிலிண்டா் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் சாா்பில் உதகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் போஜராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் நவீன்சந்திரன், விசிக மண்டலத் துணைச் செயலாளா் கட்டாரி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா், ஆா்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலுகா உறுப்பினா்கள் ராஜரத்தினம், புட்டுசாமி, வாலிபா் சங்கம் முபாரக், கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். சிபிஐ நிா்வாகி சுப்பிரமணி நன்றி கூறினாா்.
Advertisement